News April 15, 2024
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவு: இபிஎஸ்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில். அதிமுக ஆட்சியில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு போடப்பட்டது. திமுக ஆட்சியில் அதற்கான காலத்தை நீடித்து தராததால் காலாவதியானது என்றார்.
Similar News
News November 7, 2025
BREAKING: சேலத்தில் சுட்டுப் பிடித்த போலீஸ்!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே ஒரு கல்குவாரியில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 2 மூதாட்டிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில், இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கூலித் தொழிலாளிகளான பாவாயி மற்றும் பெரியம்மாள் ஆகியோரை கொலை செய்து, அவர்களது நகைகளை திருடிய அய்யனார் என்பவரை, காவல்துறையினர் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
News November 7, 2025
சேலம்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

சேலம் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News November 7, 2025
வாழப்பாடி அருகே அண்ணனை கொன்ற தம்பி!

வாழப்பாடி அருகே சேஷன்சாவடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவரது தம்பி ஆறுமுகம் (45). கடந்த 28ஆம் தேதி இவர்களது வீடு தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், உருட்டுக்கட்டையால் தாக்கியதில் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் உயிரிழந்தார். இந்நிலையில், அண்ணனை கொலை செய்த ஆறுமுகத்தை வாழப்பாடி போலீசார் கைது செய்தனர்.


