News April 15, 2024
மனைவி கண்டித்ததால் கணவா் தற்கொலை

போடி பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கா். இவரது மனைவி முத்துமாரி. ரவிசங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முத்துமாரி அதனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரவிசங்கா் நேற்று முன் தினம் (ஏப்.13) விஷம் குடித்த நிலையில் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சைப்பலனின்றி நேற்று (ஏப்.14) உயிரிழந்தாா். இதுகுறித்து போடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 27, 2025
தேனி: தபால் துறையில் வேலை…நாளை கடைசி

தேனி மக்களே, இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதாவது ஒர் டிகிரி படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் இருந்தால் போதுமானது. ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் <
News October 27, 2025
தேனி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தேனி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 27, 2025
தேனி: தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீர்மட்டம் நேற்று (அக்.26) காலை 6:00 மணிக்கு 70.06 அடியாகவும் மதியம் 12:00 மணிக்கு 70.11 அடியாகவும் உயர்ந்தது. அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. எந்த நேரத்திலும் ஆற்றின் வழியாக கூடுதல் நீர் திறக்கும் சூழல் இருப்பதால் கரையோரம் வசிப்போர், விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


