News October 4, 2025
சற்றுமுன்: கனமழை வெளுத்து கட்டும்

அரபிக் கடலில் உருவான ‘சக்தி’ புயல்’ வலுவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என IMD மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. இன்று, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும், நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
Similar News
News October 4, 2025
கரூர் துயரம்: முடிவை மாற்றினார் இபிஎஸ்

கரூர் துயரத்தையொட்டி நெடுஞ்சாலை பகுதிகளில் பரப்புரை செய்ய ஐகோர்ட் தடை விதித்தது. இதற்கிடையே, நாளை குமாரபாளையம், திருச்செங்கோட்டில் இபிஎஸ் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஐகோர்ட் தடையை சுட்டிக்காட்டி அவருக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, தனது முடிவில் மாற்றம் செய்துள்ள இபிஎஸ், உரிய அனுமதியுடன் அக்.8-ல் அங்கு பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
News October 4, 2025
உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி

வங்கிகளில் உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி சொத்துக்களை, உரியவர்களுக்கு திருப்பி தரும் பணிகள் தொடங்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களுடன் வந்தால், உடனே பணம் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், RBI-ன் UDGAM போர்ட்டல் மூலம் சொத்துக்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 4, 2025
சுயமரியாதைக்காரன் என்பதில் மகிழ்ச்சி: CM ஸ்டாலின்

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா செங்கல்பட்டில் நடந்து வருகிறது. இதில் பேசிய CM ஸ்டாலின், சுயமரியாதைக்காரன் என்ற உணர்வோடு இம்மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியை தருவதாகவும், கலைஞர், பேராசிரியருக்கு பின்னர் தி.க. தலைவர் கி.வீரமணி தன்னை வழிநடத்துவதாகவும் தெரிவித்தார். மேலும், திராவிடர் கழகத்திற்கு எதிராக திமுக தொடங்கப்படவில்லை என்றும் கூறினார்.