News October 4, 2025
சற்றுமுன்: விஜய்க்கு உச்சகட்ட பாதுகாப்பு

தவெக தலைவர் விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகத்தில் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கரூர் பரப்புரையின்போது அவர் மீது செருப்பு, தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இதுகுறித்து அவரின் பாதுகாவலர்களிடம் நேற்று அறிக்கை கேட்கப்பட்டிருந்த நிலையில், Z பிரிவு பாதுகாப்பு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 4, 2025
ஆறாத தழும்புகள் இருக்கா? ஈசியா போக்கலாம்

➤தழும்புகள் மீது ஆலிவ் எண்ணெய், மீன் எண்ணெய், வைட்டமின் E எண்ணெய் மசாஜ் செய்யலாம் ➤வாரம் ஒருமுறை தயிர்-அரிசி மாவு கலந்து தழும்புகளின் மீது மிதமாக தேய்த்தால், இறந்த செல்கள் நீங்கும் ➤காஃபி தூளை தேனுடன் கலந்து தழும்புகள் மீது 5 நிமிடம் மசாஜ் செய்யுங்கள் ➤உணவில் அதிகம் விட்டமின்ஸ், மினரல்ஸ் சேருங்கள் ➤தண்ணீர் நிறைய குடிக்கவேண்டும். சிறிய தழும்புகள் நீங்க இவை பயனளிக்கலாம். SHARE பண்ணுங்க.
News October 4, 2025
BREAKING: ஃபரூக் அப்துல்லா ஹாஸ்பிடலில் அனுமதி

ஜம்மு & காஷ்மீர் முன்னாள் CM ஃபரூக் அப்துல்லா, உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நிலைமை மோசமடைந்ததால் தற்போது தனியார் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 4, 2025
நகைக் கடன்… வந்தது முக்கிய அறிவிப்பு

நகைக் கடன் விதிகளில் மாற்றம் செய்து RBI அறிவித்துள்ளது. 2026 ஏப்.1 முதல் நகைக் கடன் வரம்பு 3 அடுக்குகளாக பிரிக்கப்படும். ₹2.5 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு நகை மதிப்பில் 85% கடன் வழங்கப்படும். ₹2.5- ₹5 லட்சத்திற்குள் கடன் வேண்டுமெனில் 80%, அதற்குமேல் வேண்டுமெனில் 75% அளவுக்குமே கடன் கிடைக்கும். மேலும், நகைக் கடனை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. SHARE