News October 4, 2025
மயிலாடுதுறை: மின்நிறுத்தம் ஒத்திவைப்பு

திருவெண்காடு துணை மின் நிலையத்தின் இன்று நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் திட்டமிட்டிருந்த காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் நடைபெறாது. பராமரிப்பு பணிகளுக்கான புதிய தேதி பின்னர் மின்வாரியத்தால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 4, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை பாஜகவின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன், மயிலாடுதுறை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கூறைநாடு ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது, குறுகிய சாலையின் வழியே கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன, அந்தச் சாலை இரு வழிச்சாலையாக இல்லாத காரணத்தால் ரயில்வே கேட் இருப்பதினால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இதற்கு மாற்றுப் பாதையை சரி செய்யக்கோரி மனு அளித்துள்ளனர்.
News October 4, 2025
மயிலாடுதுறை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுலாம்

மயிலாடுதுறை மக்களே.ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!
News October 4, 2025
மயிலாடுதுறை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது மயிலாடுதுறை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். ஷேர் பண்ணுங்க