News October 4, 2025
கடலூர் மாவட்டத்தில் 984 மாணவர்கள் சேர்க்கை

கடலூர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், விஜயதசமியை முன்னிட்டு மழலையர் முதல் 8 ஆம் வகுப்பு வரை, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 38 பேரும், கடலூர் கல்வி மாவட்டத்தில் 48 பேரும் என மொத்தம் 86 மாணவ, மாணவிகள் புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ளனர். அதுபோல தனியார் பள்ளிகளில் 898 மாணவர்கள் என கடலூர் மாவட்டம் முழுவதும் மொத்தமாக 984 மாணவ செல்வங்கள் தங்களது கல்வி பயணத்தை தொடங்கியுள்ளனர்.
Similar News
News April 9, 2026
கடலூர்: இன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி புதுவை எல்லையில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இயங்கும் தமிழக பகுதி டாஸ்மாக் கடைகளை இன்று காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை மூட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிடுள்ளார். மேலும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான அடுத்த மாதம் மே 4-ந்தேதி அன்றும் மதுபான விற்பனையை நிறுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News April 9, 2026
கடலூர்: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி..!

பண்ருட்டி அருகே உள்ள மருங்கூரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கருணாநிதி (55). இவர் மானடிக்குப்பத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது வீட்டில் இருந்த புளியமரத்தில் ஏறி, புளி உளுக்கிக் கொண்டிருந்தார். அப்போது மரத்தின் கிளை எதிர்பாராத விதமாக அருகில் சென்ற மின்கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் தாக்கி கருணாநிதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
News April 8, 2026
கடலூர்: விஜய் பிரச்சாரம் ரத்து

கடலூர் மஞ்சைநகர் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். அதனை முன்னிட்டு காவல்துறையினர் நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதில், காலை 10 மணிக்கு தொடங்குய பிரச்சாரத்தை 1 மணிக்குள்ளாக முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.


