News October 4, 2025
பணயக் கைதிகளை மீட்பது எப்போது? டிரம்ப்

பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டதற்கு டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைதிக்கு தயாராக இருப்பதாக நம்புவதாக ட்ரூத் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், காஸாவில் குண்டு வீசுவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தற்போது பணயக் கைதிகளை மீட்பது மிகவும் ஆபத்தானது என்றும், பேசித் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 4, 2025
ரோபோ சங்கரின் மகள் உருக்கம்

ரோபோ சங்கரின் இறப்புக்கு பிறகு முதல்முறையாக மீடியாவை சந்தித்த அவரது மகள் இந்திரஜா உருக்கமாக பேசியுள்ளார். ‘மக்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி. அப்பாவின் பாதையில் தொடர்வோம். அப்பாவிற்காக அன்பை வெளிப்படுத்தவே அவரது இறுதி ஊர்வலத்தில் அம்மா நடனமாடினார். அதனை புரிந்து கொள்ளாதவர்கள் தான் அம்மாவை விமர்சித்தனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
News October 4, 2025
சோதனையிலும் சாதனை படைத்த கே.எல்.ராகுல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததும் கே.எல்.ராகுல் அவுட் ஆனார். இதன்மூலம், ஒரே ஆண்டில் சதம் அடித்ததும் இருமுறை அவுட் ஆன வீரர் என்ற ரெக்கார்டை படைத்துள்ளார். முன்னதாக, கடந்த ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததும் அவர் அவுட் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட் தோன்றிய 1877 முதல், இதுவரை யாரும் ஒரே ஆண்டில் இருமுறை 100 ரன்னில் அவுட் ஆனது இல்லை.
News October 4, 2025
இவர்களுக்கு ₹1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் ரேஷன் கார்டில் சரியான முகவரி இருக்கிறதா என சரிபார்ப்பது நல்லது. அதில், முரண்பாடு இருந்தால் அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது சிக்கல் வரும். குடும்ப வருமானம் உள்ளிட்ட தகவல்களை மறைத்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் விசாரணையில் நிராகரிக்கப்படும். அண்மையில் அரசு பணியில் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் விண்ணப்பத்திருந்தால் அவர்களுக்கு ₹1,000 கிடைக்காது. SHARE