News October 4, 2025
கரூர் துயரம்: கைது செய்ய விரைந்தது போலீஸ்

கரூர் துயரம் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவில் நாமக்கல் SP விமலா, SP ஷியாமளா தேவியை இணைத்துக்கொள்ள ஐ.ஜி. அஸ்ரா கர்க்குக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில், ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஆனந்த், நிர்மல் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க சேலம், நாமக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் தனிப்படை வலைவீசி தேடி வந்தது. இந்நிலையில், அவர்களை கைது செய்ய போலீசார் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News October 4, 2025
சோதனையிலும் சாதனை படைத்த கே.எல்.ராகுல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததும் கே.எல்.ராகுல் அவுட் ஆனார். இதன்மூலம், ஒரே ஆண்டில் சதம் அடித்ததும் இருமுறை அவுட் ஆன வீரர் என்ற ரெக்கார்டை படைத்துள்ளார். முன்னதாக, கடந்த ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததும் அவர் அவுட் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட் தோன்றிய 1877 முதல், இதுவரை யாரும் ஒரே ஆண்டில் இருமுறை 100 ரன்னில் அவுட் ஆனது இல்லை.
News October 4, 2025
இவர்களுக்கு ₹1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் ரேஷன் கார்டில் சரியான முகவரி இருக்கிறதா என சரிபார்ப்பது நல்லது. அதில், முரண்பாடு இருந்தால் அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது சிக்கல் வரும். குடும்ப வருமானம் உள்ளிட்ட தகவல்களை மறைத்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் விசாரணையில் நிராகரிக்கப்படும். அண்மையில் அரசு பணியில் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் விண்ணப்பத்திருந்தால் அவர்களுக்கு ₹1,000 கிடைக்காது. SHARE
News October 4, 2025
அக்டோபரில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்

அக்டோபர், புத்துணர்ச்சியும் அமைதியான சூழலும் கொண்ட மாதம். ஏரிகள் நிரம்பி இருக்கும். கடுமையான குளிர்காலம் தொடங்குவதற்கு முன், காற்று, மிதமான குளிர்ச்சியில் இருக்கும். நீர்வீழ்ச்சிகள் ஆர்ப்பரித்து கொட்டும். கடற்கரைகள் கூட்டம் இல்லாமல் இருக்கும். எனவே, அக்டோபர் மாதத்தில் சுற்றுலா செல்ல விரும்புவோர், மேலே போட்டோக்களில் உள்ள இடங்களை சுற்றிப் பாருங்க. நீங்க எந்த ஊருக்கு போறீங்க?