News October 4, 2025
சற்றுமுன்: இதுமட்டும் நடந்தால் விஜய் கைது

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக விஜய் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திருமா, வேல்முருகன் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி இருந்தனர். இதே கருத்தையே நீதிமன்றமும் நேற்று கூறியுள்ளது. இந்நிலையில், அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், விஜய் மீது தவறு உள்ளது, அவரை கைது செய்ய வேண்டும் என சொன்னால் காவல் துறை அந்த கடமையை செய்யும் என்று திமுகவின் T.K.S.இளங்கோவன் கூறியது அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
Similar News
News October 4, 2025
ஜப்பானில் முதல்முறையாக பெண் பிரதமர்?

தீவிர வலதுசாரி தலைவரான சனே தகைச்சி, ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை சனே தேர்ந்தெடுக்கப்பட்டால், ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்று பெருமையை அவர் பெறுவார். ஆளும் LDP கட்சி தலைவருக்கான தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ள நிலையில், வரும் 15-ம் தேதி பிரதமரை தேர்ந்தெடுக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக ஜப்பான் நாடாளுமன்றம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 4, 2025
பழம்பெரும் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார்

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை சந்தியா சாந்தாராம் (94) காலமானார். இவர் இந்தி திரையுலகின் லெஜண்ட் இயக்குநரான மறைந்த வி.சாந்தாராமின் மனைவியாவார். ஜனக் ஜனக் பாயல் பாஜே, நவ்ரங், தோ ஆங்கென் பாரா ஹாத், பின்ஜாரா உள்ளிட்டவை இவர் நடித்த படங்களில் மிக பிரபலமானவை. மிகச்சிறந்த நடிகையான சந்தியா, நடனத்திலும் பெயர் பெற்றவர். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News October 4, 2025
நீரவ் மோடிக்கு சகல வசதிகளும் கொண்ட சிறை

நீரவ் மோடியிடம் ₹13,000 கோடி PNB வங்கி மோசடி குறித்து விசாரிக்கப்பட மாட்டாது என UK அரசிடம் இந்திய அரசு உறுதியளித்துள்ளது. மேலும், சகல வசதிகளையும் கொண்ட தரமான சிறையில் அவர் அடைக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது. இந்திய சிறைகளின் நிலையை கருத்தில் கொண்டு, நீரவ் மோடியை நாடு கடத்த UK கோர்ட் தயக்கம் காட்டியது. இதேபோல், பெல்ஜியத்தில் உள்ள அவரது உறவினர் மெகுல் சோக்ஸிக்கும் இந்திய அரசு உறுதியளித்தது.