News October 4, 2025
மயிலாடுதுறை: காவல்துறை முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கி கணக்கில் இருந்த பணத்தை இழக்க நேரிட்டால் 1930 என்ற உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. உங்கள் பணம் மோசடி நபர்களிடமிருந்து மீட்டு தரப்படும் என தெரிவித்துள்ளது வேறு வகையான சைபர் குற்றம் சம்பந்தமாக www.cybercrime.gov.in ல் புகார் தெரிவிக்கலாம்
Similar News
News October 4, 2025
மயிலாடுதுறை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுலாம்

மயிலாடுதுறை மக்களே.ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!
News October 4, 2025
மயிலாடுதுறை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது மயிலாடுதுறை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். ஷேர் பண்ணுங்க
News October 4, 2025
மயிலாடுதுறை: மனுக்களை பெரும் குறைதீர்ப்பு வாகனம்

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வானகிரி, மேலையூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் நம்ம பூம்புகார், நம்ம MLA என வாகனத்தில் மூலம் மக்கள் குறைதீர்ப்பு வாகனம் சென்று களத்தில் உள்ள பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று உடனடி தீர்வு மேற் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.