News April 15, 2024
சிக்ஸரில் ரோஹித் சர்மா சாதனை

சென்னை அணிக்கு எதிராக அபாரமாக ஆடிவரும் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்களை அடித்தபோது டி20 போட்டிகளில் 500 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 1,056 சிக்சர்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். பொல்லார்ட்(860), ரசல்(678), கொலின் முன்ரோ(548) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
Similar News
News November 2, 2025
பக்தி படம் இயக்கும் ‘பாட்ஷா’ இயக்குநர்

‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் தற்போது சத்ய சாய் பாபா பற்றி ‘அனந்தா’ என்ற பக்தி படத்தை இயக்கி வருவதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெகபதி பாபு, சுஹாசினி, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
நடிகை அர்ச்சனா தற்கொலையா? CLARITY

பிரபல தொகுப்பாளரும், நடிகையுமான VJ அர்ச்சனா, தனது கணவருடன் ஏற்பட்ட சண்டையால் தற்கொலை செய்து கொண்டதாக ஒருவர் யூடியூபில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பியுள்ளார். இதை பார்த்து கடுப்பான அர்ச்சனா, அந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், டேய்! புருஷன் கூடச் சண்டை போட்டுத் தற்கொலை… நோ சான்ஸ்! அவரை நான்தான் அடிப்பேன் என்று அர்ச்சனா பதிலடி கொடுத்துள்ளார்.
News November 2, 2025
காங்கிரஸ் அரச குடும்பத்தின் தூக்கம் போய்விட்டது: PM

ஆபரேஷன் சிந்தூர் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து காங்., பாக்., இன்னும் மீளவில்லை என PM மோடி தெரிவித்துள்ளார். பிஹார் பிரசாரத்தில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நாடே கொண்டாடிய நிலையில், காங்., RJD அதை விரும்பவில்லை. இதனால் காங்கிரஸ் அரச குடும்பத்தின் தூக்கம் பறிபோய்விட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், CM பதவிக்காக எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதாகவும் விமர்சித்துள்ளார்.


