News October 4, 2025
கோவையில் உலக புத்தொழில் மாநாடு

கோவையில் அக்.9, 10-ம் தேதிகளில், தமிழக அரசு சார்பில் ‘உலக புத்தொழில் மாநாடு’ நடைபெறவுள்ளது. இதில் 39 நாடுகளிலிருந்து 364 பங்கேற்பாளர்களுடன் 30,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் மத்திய அரசின் 10 துறைகள், 10 மாநிலங்களை சேர்ந்த அரசு துறைகளும் பங்கேற்கின்றன. அத்துடன், 1,000-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்கங்களும் அமைக்கப்படுகின்றன.
Similar News
News October 4, 2025
விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி!

கரூர் துயர சம்பவம் எப்படி நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, விஜய் மீது ஒட்டுமொத்தமாக குற்றம்சாட்டக் கூடாது என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை வைத்து விஜய்யை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என சிலர் திட்டமிட்டுள்ளதாகவும், அவர் வீட்டிலேயே முடங்கிவிடாமல் வெளியே வரவேண்டும் எனவும் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
News October 4, 2025
சச்சினுக்கு அடுத்த இடத்தில் ஜடேஜா

வெ.இண்டீஸுக்கு எதிரான தொடரில் சதத்துடன், 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் டெஸ்டில் அதிக ஆட்ட நாயகன் விருதை பெற்றவர்கள் பட்டியலில் ஜடேஜா(11) 2-வது இடத்திற்கு முன்னேறினார். 14 ஆட்ட நாயகன் விருதுகளுடன் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். டெஸ்டில் ஜடேஜா 3,990 ரன்களை, 334 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
News October 4, 2025
சற்றுமுன் அதிரடி கைது

சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து யூடியூபர் மாரிதாஸை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கரூர் துயர வழக்கில் விஜய் & TVK தரப்பில் யாருமே நீதிமன்றத்தில் தங்கள் பக்க வாதத்தை முன்வைக்க இயலாத நிலையை உருவாக்கி, தந்திரமாக திமுக ஒரு நீதிமன்ற நாடகத்தையே நடத்தி முடித்துள்ளது என்று X-ல் விமர்சித்திருந்தார். இந்நிலையில், உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக, சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர்.