News October 4, 2025

இரவில் ஒன்று பகலில் வேறாக பேசிய சீமான்

image

ஒருவர் மீது கொலைவெறி வந்தால், அடுத்த கூட்டத்தில் (தவெக பரப்புரை) அவரை தள்ளிவிடுவேன், அங்கு நசுங்கி இறந்துவிடுவார், இதனால் கொலை செய்து சிறைக்கு செல்ல வேண்டியதில்லை என அக்.2 இரவில் சீமான் பேசியுள்ளார். பின்னர், நேற்று காலை பேட்டியளித்த அவர், கரூர் துயரைவிட பெரும் இனப்படுகொலையை பார்த்தவன் நான், இதற்கு வருத்தம் கூட விஜய் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த வேறுபட்ட கருத்து பேசுபொருளாகியுள்ளது.

Similar News

News October 4, 2025

கேப்டன் பதவியில் இருந்து ரோஹித்தை நீக்க திட்டம்

image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்டில் கேப்டனாக உள்ள சுப்மன் கில் ODI-க்கு கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. டெஸ்ட் மற்றும் டி20-களில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் ODI மட்டுமே விளையாடி வருகிறார். கில் தலைமையில் 2027 உலகக்கோப்பையை எதிர்கொள்ள BCCI திட்டமிட்டுள்ளது இதன் மூலம் தெரிகிறது.

News October 4, 2025

₹20 லட்சம் வேணுமா? இதோ இருக்கு அசத்தல் திட்டம்

image

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் ₹20 லட்சம் தொகையை பெறலாம். உங்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை என்றால், தினமும் ₹50 செலுத்துங்கள். 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை பெறலாம். இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.

News October 4, 2025

மாறிமாறி குற்றஞ்சாட்டுவதை விட்டுவிடுங்க: மு.க.ஸ்டாலின்

image

கரூர் துயரத்தில் திமுக கூட்டணி கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் மாறிமாறி குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து CM ஸ்டாலின், துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என அறிவுறுத்தியுள்ளார். இனி இப்படி ஒரு பெருந்துயரம் நடக்கக்கூடாது. இதற்காக அனைவரது ஆலோசனைகளையும் வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.

error: Content is protected !!