News October 4, 2025
ஜெய்சங்கர் – பிரேசில் சிறப்பு ஆலோசகர் சந்திப்பு

பிரேசில் அதிபரின் சிறப்பு ஆலோசகரும், தூதருமான செல்ஸோ அமோரிமை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் சந்தித்துள்ளார். அப்போது இருநாட்டு ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் சர்வதேச விஷயங்களை பேசியுள்ளனர். மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த அமோரிம், இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு, எரிசக்தி, மருத்துவம் மற்றும் மருந்துகள் குறித்து ஆலோசித்துள்ளார்.
Similar News
News October 4, 2025
மாறிமாறி குற்றஞ்சாட்டுவதை விட்டுவிடுங்க: மு.க.ஸ்டாலின்

கரூர் துயரத்தில் திமுக கூட்டணி கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் மாறிமாறி குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து CM ஸ்டாலின், துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என அறிவுறுத்தியுள்ளார். இனி இப்படி ஒரு பெருந்துயரம் நடக்கக்கூடாது. இதற்காக அனைவரது ஆலோசனைகளையும் வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.
News October 4, 2025
BREAKING: இந்திய அணி அபார வெற்றி!

WI-க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் & 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் WI 162 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்தியா 448/5 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய WI, இந்திய பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 146 ரன்களில் சுருண்டது. ஜடேஜா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
News October 4, 2025
சற்றுமுன்: கனமழை வெளுத்து கட்டும்

அரபிக் கடலில் உருவான ‘சக்தி’ புயல்’ வலுவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என IMD மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. இன்று, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும், நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.