News April 14, 2024

மக்களை தவறாக வழிநடத்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல்

image

பல ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்தியதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், சுதந்திரம் கிடைத்து பல ஆண்டுகள் ஆன நிலையிலும் மே.வங்கம் வளர்ச்சியடையவில்லை. இந்த முறை பாஜக மே.வங்கத்தில் அதிக இடங்களில் வெற்றிபெறும் என்றார்.

Similar News

News August 18, 2025

துணை ஜனாதிபதி தேர்தல்.. திமுகவுக்கு புதிய நெருக்கடி

image

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசி வாயிலாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். தமிழகத்தை சேர்ந்தவருக்கு உங்களின் ஆதரவு இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். CPR-க்கு எதிரான நிலைப்பாடு எடுத்தால், தமிழரை திமுக புறக்கணித்து விட்டதாக சட்டப்பேரவைத் தேர்தலின்போது NDA பரப்புரை செய்ய வாய்ப்புள்ளது.

News August 18, 2025

Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

image

1. சூரியக் குடும்பத்தின் மையத்தை கண்டிபிடித்தவர் யார்?
2. சங்க இலக்கியங்களில் வரலாற்றுச் செய்திகளை அதிகமாக கூறும் நூல் எது?
3. சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் சிக்கிய ஆண்டு எது?
4. ‘சரிகமபதநிச’ என்ற ஸ்வர வரிசை எந்த ராகத்தை குறிக்கிறது?
5. அழகான பெண்ணுக்கு அதிசய வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள்.. அவள் யார்?
பதில்கள் மதியம் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.

News August 18, 2025

BREAKING: திமுகவுக்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்

image

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என திமுகவிற்கு இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு தமிழர் துணை ஜனாதிபதியாக நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அரசியலாக பார்க்கக்கூடாது. கட்சி பேதமின்றி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் CPR-ஐ ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!