News October 4, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) நாமக்கல் கிளை கூட்டம் இன்று (அக்டோபர் 3) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 4) முதல் முட்டையின் விலை ரூ. 5.05 ஆகவே நீடிக்கும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Similar News
News October 4, 2025
நாமக்கல்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, நாமக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே<
News October 4, 2025
நாமக்கல்லில் ரூ.6 லட்சம் மானியம் கலெக்டர் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் 15 உழவர் நல சேவை மையங்கள் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது எனவே விருப்பமுள்ள வேளாண் தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்கள் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ARS வலைதளத்தில் பதிவு செய்து ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியமாக வங்கி கடன் மூலம் பெற்று பயன்பெறலாம் ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்
News October 4, 2025
நாமக்கல்: மாணவ/மாணவிகளுக்கு ரூ.15 ஆயிரம் பரிசு!

உலகப் பொதுமறையான திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவ/மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. 2025-26 ஆண்டிற்கான திருக்குறள் போட்டியில் கலந்துக் கொள்ள விரும்பும் நாமக்கல்லை சேர்ந்த மாணவ/மாணவியர் அக்.31ந் தேதிக்குள் https://tamilvalarchithurai.org/tkm/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.