News October 3, 2025
தருமபுரி: டிகிரி போதும்.. கனரா வங்கியில் செம வாய்ப்பு!

தருமபுரி மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 394 பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News November 13, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியின் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (நவ.12) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் குணவர்மன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சரவணன், தோப்பூரில் குமரவேல், மதிகோன்பாளையத்தில் கண்ணன் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க
News November 12, 2025
தருமபுரி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தருமபுரி மாவட்டத்தில் 5 சட்ட மன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 04.ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள 12,85,432 வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பம் நிரப்புவதில் சந்தேகம் இருந்தால் அதிகாரிகளை தொடர்பு கொள்ள தொடர்பு எண்கள் மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவித்துள்ளார்.
News November 12, 2025
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் துவக்கம்!

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (நவ.12) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, அரசுத் துறை அலுவலர்கள் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


