News October 3, 2025

தேனி: கண்ணிமைக்கும் நேரத்தில் பைக் திருட்டு

image

தேனியை சேர்ந்தவர் சந்தன பீர் ஒலி. இவர் நேற்று முன்தினம் வேலை விஷயமாக பைக்கில் வத்தலகுண்டு நோக்கி சென்றுள்ளார். எ.காமாட்சிபுரம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது கண்ணில் தூசி பட்டதால் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள நர்சரியில் தண்ணீர் வாங்கி முகத்தை கழுவி உள்ளார். மீண்டும் திரும்பி வந்த பொழுது பைக் திருடப்பட்டது தெரிய வந்தது. திருட்டு குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு (அக்.3) பதிவு.

Similar News

News October 3, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்!

image

தேனி மாவட்டத்தில் இன்று (03.10.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News October 3, 2025

இல்லத்திற்கே ரேசன் பொருட்கள் ஆட்சியர் அறிவிப்பு!

image

தேனி மாவட்டத்தில் உள்ள முதியோர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 05.10.2025 மற்றும் 06.10.2025 ஆகிய இரண்டு நாட்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் அனைத்தும் வழங்கப்படவுள்ளது, என தேனி மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News October 3, 2025

தேனி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0454-6262112 அணுகலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!