News October 3, 2025

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

image

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் வசிப்போர் வெளியே செல்லும் போது குடை எடுத்துச் செல்லவும்.

Similar News

News October 3, 2025

ஸ்டாலின் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா? EPS

image

ராமநாதபுரத்தில் <<17901865>>CM பேசியதற்கு<<>> EPS பதிலடி கொடுத்துள்ளார். கரூருக்கு ஓடோடி சென்ற நீங்கள், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை, வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை என அடுக்கடுக்கான கேள்விகளை EPS எழுப்பியுள்ளார். மேலும் நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா எனவும் கேட்டுள்ளார். குறைபாடுகளை சுட்டிக் காட்டினால், அது உங்களுக்கு கூட்டணிக் கணக்காக தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.

News October 3, 2025

BREAKING: விஜய் கட்சிக்கு பெரும் பின்னடைவு

image

கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் N.ஆனந்த், CTR நிர்மல் குமாரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, அவர்கள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே மா.செ., மதியழகன் கைதான நிலையில், ஆதவ் அர்ஜுனா மீதும் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பது, தவெக தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

News October 3, 2025

‘SORRY அம்மா.. நான் சாகப் போறேன்’

image

‘அம்மா, என்ன மன்னிச்சிரு. எனக்கு வாழ விருப்பமில்ல. அப்பா இறந்த பிறகு, தாத்தா ஒவ்வொரு வாரமும் சண்டை போடுறாரு. நிம்மதியா வாழ விடமாட்டேங்கிறாரு. தாத்தாவுக்கு தண்டனை கிடைக்கணும்.’ தெலங்கானாவில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சிறுமி அஞ்சலி(17) கடைசியாக எழுதிய வரிகள் இவை. தந்தைவழி தாத்தா தொடர்ந்து தகராறு செய்ததால் மன உளைச்சலில் அவர் விபரீத முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

error: Content is protected !!