News April 14, 2024
கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை, போலீசார் 4 மணி நேரத்தில் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையை, கார்த்திக், செல்வம் ஆகிய இருவர் கடத்திச் சென்றனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சிசிடிவியை ஆய்வு செய்ததுடன், எண்ணூர் பகுதியில் இருந்து குழந்தையை மீட்டனர். இதையடுத்து காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Similar News
News November 7, 2025
கலைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்து: CM ஸ்டாலின்

நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவரின் X தள பதிவில், பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்கு கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும், பன்முகத்தன்மை மிக்க நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டுள்ள கலைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்து என வாழ்த்தியுள்ளார்.
News November 7, 2025
BREAKING: கட்சியில் இருந்து கூண்டோடு நீக்கம்

ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன் ஆதரவாளர்களை கூண்டோடு கட்சியிலிருந்து நீக்கி EPS அறிவித்துள்ளார். செங்கோட்டையனின் உறவினரான Ex MP சத்யபாமா உடன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன்(கோபி மேற்கு ஒன்றியம்), ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன்,Ex ஒன்றிய தலைவர்கள் மவுதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழக செயலாளர் SS ரமேஷ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.
News November 7, 2025
போலீஸில் புகாரளித்த பாடகி சின்மயி!

கிளப்ஹவுஸ் செயலியில் உரையாடிக்கொண்டிருந்த போது பாடகி சின்மயியின் குழந்தைகள் இறக்க வேண்டும் என சிலர் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், தனது குழந்தைகளுக்கு எதிராக சிலர் வெறுப்பை பரப்பி வருவதாக ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி.சஜ்ஜனாரிடம் சின்மயி X-ல் புகாரளித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


