News October 3, 2025
திருச்சி: பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக, சிறப்பாக செயல் புரிந்த 13-18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் மாநில அரசின் சார்பில், விருது மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற தளத்தில் நவ.15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 3, 2025
திருச்சி: திருமண தடையை நீக்கும் அற்புத கோவில்

திருச்சி மாவட்டம், பொன்மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற பொன்னேஸ்வரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. திருமண தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் இக்கோவிலில் உள்ள பால் கிணற்றில் நீராடி அன்னைக்கு அபிஷேகம் செய்தால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. நீங்கள் இக்கோவிலுக்கு சென்றது உண்டா ? மேலும் உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE செய்யவும்!
News October 3, 2025
திருச்சி: B.E / B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5.. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 3, 2025
திருச்சி: 87 கம்பெனிகள் மீது அதிரடி நடவடிக்கை

தேசிய விடுமுறை தினமான நேற்று (காந்தி ஜெயந்தி) திருச்சியில் உள்ள 125 நிறுவனங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத மற்றும் தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்றுவிடுப்பு அளிக்காத 87 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.