News October 3, 2025
ஹாஸ்பிடலில் இருந்து கார்கே டிஸ்சார்ஜ்

திடீர் உடல்நலக்குறைவால் கடந்த செப்.30-ம் தேதி பெங்களூருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் மல்லிகார்ஜுன கார்கே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசப்பிரச்னை இருந்ததால் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. தற்போது கார்கேவின் உடல்நிலை சீராக உள்ளதால் அவர் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருந்தாலும் டாக்டர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News October 3, 2025
ஆதவ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவு: ஐகோர்ட்

ஆதவ் அர்ஜுனா மீது தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவரின் சமூகவலைதள பதிவுக்கு பின்னால் உள்ள பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆணையிட்ட கோர்ட், ஆதவ்வின் பதிவுக்கு கண்டனங்களையும் தெரிவித்துள்ளது. நேபாளம், இலங்கை போன்று புரட்சி ஏற்படுவதே ஒரே வழி என ஆதவ் அர்ஜுனா பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
News October 3, 2025
திமுக – விசிக கூட்டணியில் முறிவா? திருமாவளவன்

கரூர் சம்பவத்தில் விஜய்க்கும், திமுகவுக்கும் டீலிங் உள்ளதா என திருமாவளவன் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையானது. இதனால் திமுக – விசிக கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தனது விமர்சனத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை எனவும், திமுக – விசிக கூட்டணியில் முறிவு ஏற்படாது என்றும் திருமா விளக்கம் அளித்துள்ளார். கரூர் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
News October 3, 2025
BREAKING: விஜய்யை விளாசிய நீதிபதி

கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என ஐகோர்ட் ஜட்ஜ் செந்தில்குமார் சாடியுள்ளார். கரூரில் நடந்தது MAN MADE DISASTER எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். துயர சம்பவம் நடந்ததும் பரப்புரை ஏற்பாட்டாளர்கள், தலைவர் என அனைவரும் தொண்டர்களையும் அவர்களை பின்தொடர்பவர்களையும் கைவிட்டுவிட்டு மறைந்துவிட்டனர் என்றும் ஜட்ஜ் காட்டமாக கூறியுள்ளார்.