News October 3, 2025
விஜய்க்காக CM ஸ்டாலினிடம் கண்டிஷன் போட்டாரா ராகுல்?

விஜய் மீது வழக்கு வேண்டாம் என CM ஸ்டாலினிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதால்தான், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என வேல்முருகன் கூறியது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுபற்றி CM விளக்கமளிக்க வேண்டும் எனக் கூறிய அவர், விஜய் அலுவலகத்தில் ஆயுதபூஜை கொண்டாட்டம் நடைபெற்றதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், விஜய், முன்னணி நிர்வாகிகள் ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 3, 2025
திட்டமிட்ட செயல் அல்ல, விபத்து: தவெக வாதம்

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் திட்டமிட்ட செயல் அல்ல; நடந்தது ஒரு விபத்து என்று தவெக தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது கடமையை செய்யாமல் தவெகவினர் மீது போலீசார் குற்றம் சுமத்துகின்றனர். கூட்டம் அதிகமாக இருந்தால் நிகழ்வை ரத்து செய்யுமாறு காவல்துறை கூறியிருக்கலாமே எனத் தெரிவித்த தவெக தரப்பு, கருணாநிதி மறைவின்போது கூட்ட நெரிசலில் 2 பேர் உயிரிழந்த நிகழ்வையும் சுட்டிக்காட்டியது.
News October 3, 2025
பாகிஸ்தானின் 5 போர் விமானங்களை அழித்தோம்

Op Sindoor-ல் பாகிஸ்தானின் 4-5 போர் விமானங்களை வீழ்த்தியதாக இந்திய விமானப்படை (IAF) தலைமை தளபதி அமர்பிரீத் சிங் தெரிவித்துள்ளார். இதில் அமெரிக்க தயாரிப்பான F-16, சீன தயாரிப்பான JF 17 ரக விமானங்கள் அடங்கும். இந்திய விமானங்களை வீழ்த்தியதாக PAK சொல்வது கட்டுக்கதை என்ற அவர், அந்நாட்டின் போர் விமானங்களை மட்டுமின்றி, ரேடார்கள், கட்டுப்பாட்டு மையங்களையும் கூட துவம்சம் செய்ததாக கூறியுள்ளார்.
News October 3, 2025
சற்றுமுன்: அறிவித்தார் விஜய்

தவெகவின் முக்கியத் தலைவர்களான N.ஆனந்த், CTR நிர்மல் குமார் தலைமறைவாகியுள்ள நிலையில், விஜய் <<17903527>>புதிய அறிவிப்பை<<>> வெளியிட்டுள்ளார். கட்சிப் பணிகள் தொய்வின்றி தொடர 20 பேர் கொண்ட குழுவை நியமித்து அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மா.செ.,-க்களிடம் பேசிய அவர், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை, தான் விரைவில் சந்திக்க வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.