News October 3, 2025

ஆஷா போஸ்லேவின் குரலை பயன்படுத்த தடை

image

பாடகி ஆஷா போஸ்லேவின் குரலை AI மூலம் மறு உருவாக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் தனது குரல், புகைப்படம், பேச்சு ஆகியவற்றை AI மூலம் ஜெனரேட் செய்து விற்பதாக ஆஷா போஸ்லே, மும்பை HC-ல் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழில் ஓ பட்டர்ஃபிளை, செண்பகமே செண்பகமே, செப்டம்பர் மாதம் உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.

Similar News

News October 3, 2025

திட்டமிட்ட செயல் அல்ல, விபத்து: தவெக வாதம்

image

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் திட்டமிட்ட செயல் அல்ல; நடந்தது ஒரு விபத்து என்று தவெக தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது கடமையை செய்யாமல் தவெகவினர் மீது போலீசார் குற்றம் சுமத்துகின்றனர். கூட்டம் அதிகமாக இருந்தால் நிகழ்வை ரத்து செய்யுமாறு காவல்துறை கூறியிருக்கலாமே எனத் தெரிவித்த தவெக தரப்பு, கருணாநிதி மறைவின்போது கூட்ட நெரிசலில் 2 பேர் உயிரிழந்த நிகழ்வையும் சுட்டிக்காட்டியது.

News October 3, 2025

பாகிஸ்தானின் 5 போர் விமானங்களை அழித்தோம்

image

Op Sindoor-ல் பாகிஸ்தானின் 4-5 போர் விமானங்களை வீழ்த்தியதாக இந்திய விமானப்படை (IAF) தலைமை தளபதி அமர்பிரீத் சிங் தெரிவித்துள்ளார். இதில் அமெரிக்க தயாரிப்பான F-16, சீன தயாரிப்பான JF 17 ரக விமானங்கள் அடங்கும். இந்திய விமானங்களை வீழ்த்தியதாக PAK சொல்வது கட்டுக்கதை என்ற அவர், அந்நாட்டின் போர் விமானங்களை மட்டுமின்றி, ரேடார்கள், கட்டுப்பாட்டு மையங்களையும் கூட துவம்சம் செய்ததாக கூறியுள்ளார்.

News October 3, 2025

சற்றுமுன்: அறிவித்தார் விஜய்

image

தவெகவின் முக்கியத் தலைவர்களான N.ஆனந்த், CTR நிர்மல் குமார் தலைமறைவாகியுள்ள நிலையில், விஜய் <<17903527>>புதிய அறிவிப்பை<<>> வெளியிட்டுள்ளார். கட்சிப் பணிகள் தொய்வின்றி தொடர 20 பேர் கொண்ட குழுவை நியமித்து அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மா.செ.,-க்களிடம் பேசிய அவர், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை, தான் விரைவில் சந்திக்க வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!