News October 3, 2025

இன்று விசாரணைக்கு வருகிறது கரூர் கூட்ட நெரிசல் வழக்கு

image

கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், சிபிஐ விசாரணை கோரிய 7 மனுக்கள் இன்று HC மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் தண்டபானி, ஜோதிராமன் அமர்வில் இந்த மனுக்கள் விசாரிக்கப்படுகின்றன. இதனுடன் இணைந்து புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களுக்கு விசாரிக்கப்பட உள்ளன.

Similar News

News October 3, 2025

டெல்லிக்கு வர MP-க்களுக்கு அழைப்பு!

image

நாடாளுமன்ற மாநிலங்களவை அனைத்து கட்சி கூட்டம் அக்.7-ம் தேதி நடைபெறவுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்கவுள்ளதால், அது குறித்து ஆலோசனை நடத்த தலைநகரில் அனைத்து கட்சி MP-க்களின் பிரதிநிதிகள் கூடுகின்றனர். மாநிலங்களவை தலைவர்
சி.பி.ராதாகிருஷ்ணனின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், GST, USA வரி விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம்.

News October 3, 2025

பூமியில் உதித்த தேவதைகளின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

image

ஒன்றா இரண்டா.. வார்த்தைகள் போதாது இந்த தேவைகளின் அழகை வர்ணிக்க. தசரா, விஜயதசமியை முன்னிட்டு கலர்புல் போட்டோஷுட் நடத்திய ஹீரோயின்கள், அவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளனர். இதை பார்த்து ரசிகர்கள், இப்படி நீங்கள் போட்டோக்கள் போட்டால், வருஷம் முழுக்க பண்டிகை கொண்டாடலாமே என கமெண்ட் செய்கின்றனர்.

News October 3, 2025

கரூர் விவகாரத்தில் விஜய் செய்தது தவறு: சீமான்

image

கரூர் விவகாரத்தில் விஜய்க்கும், திமுகவுக்கும் டீலிங் இருக்கா என்று திருமா கேட்டதில் உண்மை இருக்கலாம் என சீமான் தெரிவித்துள்ளார். விரைவில் தேர்தல் வர உள்ளதாலேயே கரூர் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டினார். விஜய்க்காகவே மக்கள் கூடிய நிலையில் உயிரிழப்புகளுக்கு அவர் பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்றும், ஆனால் விஜய் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என சாடினார்.

error: Content is protected !!