News October 3, 2025

விழுப்புரம்: வங்க கடலில் புயல் சின்னம்! மழைக்கு வாய்ப்பு

image

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதனால் இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெளியில் செல்பவர்கள் மழை வாய்ப்பு இருப்பதால் குடை எடுத்துட்டு போக மறக்காதீங்க!

Similar News

News October 3, 2025

விழுப்புரம்: பண்டிகைக்கு லீவு தரலையா?

image

தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் படி ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி போன்ற அரசு விடுமுறை தினங்களில் ஒவ்வொரு நிறுவனமும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். விடுமுறை தினத்தில் வேலை செய்தால் அதற்கு ஈடாக மாற்று தின விடுப்பு (அ) இரட்டிப்பு சம்பளம் தர வேண்டும். இவை தரவில்லை என்றாலோ (அ) சம்பளத்துடன் விடுப்பு தரவில்லை என்றாலோ மாவட்ட தொழிலாளர் நலவாரியத்தில் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News October 3, 2025

திண்டிவனத்தில் மாரத்தான் போட்டி

image

திண்டிவனத்தில் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 5ம் தேதி காலை 6 மணியளவில் சீனியர், ஜூனியர் இரு பிரிவுகளில் மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். சீனியர் பிரிவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் ,ஜூனியர் பிரிவு 10-15 வயதிற்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News October 3, 2025

விழுப்புரம் மக்களே இந்த நம்பர் இருக்கா?

image

விழுப்புரம் மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதவி தேவைப்படுவோர் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் நலன் பாதுகாப்பு சிறப்பு சேவை துறை அலுவலகத்திற்கு தொலைபேசி எண் 04146 299659 மற்றும் அவசர உதவிக்கு 1098 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. குழந்தைகள் பரிதவிப்பு குறித்து அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!