News October 3, 2025
நெல்லை போலீசார் அதிரடி – 105 பேர் கைது

நெல்லை போலீஸ் சுப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்துள்ளாதவது: சாதி சார்ந்த பிரச்னைகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் சாதிய உணர்வுகளை தூண்டி சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறது. ஆபத்தான ஆயுதங்களை காட்டும் பதிவுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கபட்டு 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 பேர் கைது செய்யபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
Similar News
News October 3, 2025
நெல்லை வழியாக செல்லும் ரயில்; நாளை மாற்று பாதை

நாகர்கோவில்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் (16321) நாளை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, நெல்லை, விருதுநகர் வழியாக திருச்சி, காரைக்குடி, மானாமதுரை மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் திருமங்கலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட நிலையங்களைத் தவிர்க்கும். அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் தற்காலிக நிறுத்தம் உண்டு.
News October 3, 2025
நெல்லை: தசரா திருவிழா 100 பேருந்துகள் இயக்கம்

திருநெல்வேலியில் இருந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவிற்காக 100 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் நெரிசலின்றி பயணிக்க, போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
News October 3, 2025
நெல்லை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <