News October 3, 2025
விஜய்யை கைது செய்யணுமா? பார்த்திபன் பதில்

சினிமா துறையில் இருப்பவர்களுக்கு சமூக பொறுப்பு தேவை, ஏனென்றால் மக்கள் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கின்றனர் என பார்த்திபன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், கரூர் துயரம் தொடர்பாக விஜய்யை கைது செய்ய வேண்டுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு, இப்படி பேசுவது அத்துமீறல் என்றார். இச்சம்பவம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது, நீதிபதி உள்ளார், விசாரணைக்கு பிறகே உண்மை தெரியவரும் என கூறினார்.
Similar News
News October 3, 2025
ஹாஸ்பிடலில் இருந்து கார்கே டிஸ்சார்ஜ்

திடீர் உடல்நலக்குறைவால் கடந்த செப்.30-ம் தேதி பெங்களூருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் மல்லிகார்ஜுன கார்கே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசப்பிரச்னை இருந்ததால் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. தற்போது கார்கேவின் உடல்நிலை சீராக உள்ளதால் அவர் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருந்தாலும் டாக்டர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.
News October 3, 2025
கரூர் துயரம்: கோர்ட் விசாரணை தொடங்கியது

கரூர் சம்பவம் தொடர்பான 9 வழக்குகளின் விசாரணை தொடங்கியுள்ளது. மதுரை HC-ல் அரசியல் கட்சி கூட்டங்களுக்கு புதிய விதிகளை வகுக்க கோரிய மனு, N.ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமின், வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு தொகையை உயர்த்த கோரிய மனு, தவெகவிற்கு தடை கோரிய மனு உள்ளிட்ட மனுக்களின் விசாரணை சற்றுமுன் தொடங்கியது.
News October 3, 2025
டிகிரி முடித்தாலே போதும் வங்கியில் வேலை.. APPLY NOW!

Canara Bank-ல் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 20- 28 வயதுக்குட்பட்ட எந்த டிகிரி முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹15,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு, அக்டோபர் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு <