News October 3, 2025
ஸ்டாலினுக்கு மக்கள் சல்யூட்: செல்வப்பெருந்தகை

கரூர் துயர சம்பவத்தின்போது போலீஸார் தியாக உள்ளத்தோடு செயல்பட்டதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்பவம் நடந்த அன்று உடனடியாக ஆலோசனை நடத்தியது மட்டுமின்றி, இரவே கரூர் வந்து சென்ற CM ஸ்டாலினுக்கு மக்கள் சல்யூட் அடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இச்சம்பவத்தில் பிணத்தின் மீது மலிவான அரசியலை பாஜக செய்வதாகவும் பகிரங்கமாக விமர்சித்தார்.
Similar News
News October 3, 2025
கரூர் துயரம்: கோர்ட் விசாரணை தொடங்கியது

கரூர் சம்பவம் தொடர்பான 9 வழக்குகளின் விசாரணை தொடங்கியுள்ளது. மதுரை HC-ல் அரசியல் கட்சி கூட்டங்களுக்கு புதிய விதிகளை வகுக்க கோரிய மனு, N.ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமின், வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு தொகையை உயர்த்த கோரிய மனு, தவெகவிற்கு தடை கோரிய மனு உள்ளிட்ட மனுக்களின் விசாரணை சற்றுமுன் தொடங்கியது.
News October 3, 2025
டிகிரி முடித்தாலே போதும் வங்கியில் வேலை.. APPLY NOW!

Canara Bank-ல் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 20- 28 வயதுக்குட்பட்ட எந்த டிகிரி முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹15,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு, அக்டோபர் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு <
News October 3, 2025
BREAKING: அடுத்தடுத்து கட்சி பதவியை பறிக்கும் இபிஎஸ்

செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அவரின் ஆதரவாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை EPS தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில், செங்கோட்டையன் ஆதரவாளர்களை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியதுடன், ஏ.கே.செல்வராஜ் ஆதரவாளர்கள் 35 பேருக்கு பொறுப்புகளை வழங்கியுள்ளார். கட்சியில் செங்கோட்டையன் ஆதரவு வட்டத்தை குறைக்கும் வகையில், தற்போது இந்த மாற்றங்களை EPS செய்திருக்கிறார்.