News October 3, 2025
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளவில்லை: மஸ்க் ரியாக்ஷன்

‘ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளவில்லை’ என்ற X பதிவிற்கு, சிந்திப்பது போன்ற எமோஜியை பதிவிட்டு ரீட்வீட் செய்துள்ளார் எலான் மஸ்க். தற்போது இது வைரலாகியுள்ளது. அந்த பதிவில், ‘இந்தியர்கள் இங்கிலாந்தில் கால் பதித்து ஆங்கிலேயர்களாக மாறினால், பின்னர் இந்தியாவில் கால் பதித்த ஆங்கிலேயர்கள் இந்தியர்களாக மாறினர். எனவே பிரிட்டிஷார் இந்தியாவை ஆளவில்லை’ என உள்ளது. இந்த பதிவில், காலனித்துவமே இல்லை என கூறப்படுகிறது.
Similar News
News October 3, 2025
ராமநாதபுரம் இனி தண்ணீர் இல்லா காடு இல்லை: CM

ராமநாதபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் ₹176 கோடி மதிப்பிலான திட்டங்களை CM ஸ்டாலினை தொடங்கி வைத்தார். ராமநாதபுரத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்தது திமுக அரசுதான் என தெரிவித்த அவர், ராமநாதபுரத்தை இனி தண்ணீர் இல்லாத காடு என சொல்ல முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும் திமுக அரசில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டும் CM ஸ்டாலின் பேசினார்.
News October 3, 2025
பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

2025-26 கல்வியாண்டுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (RTE Act) அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக அரசு நேற்று அறிவித்தது. இந்நிலையில், <<17895876>>RTE <<>>திட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்திவிடும். எனவே, தனியார் பள்ளிகளில் ஏற்கனவே மாணவர்களிடம் பெறப்பட்ட கட்டணங்களை 7 நாளுக்குள் மீண்டும் திருப்ப ஒப்படைக்க பள்ளிக்கல்விதுறை உத்தரவிட்டுள்ளது.
News October 3, 2025
RECIPE: சுவையான ராகி புட்டு!

ராகி புட்டு மிகவும் சுவையானது மட்டுமின்றி ஹெல்தியானது கூட. செய்வதும் மிகவும் எளியது *ராகி மாவில் உப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்க்கவும் *பொடிப்போல உருட்டி புட்டுக்குண்டில் அடுக்கவும் *இந்த மாவை, ஆவியில் 10 நிமிடம் வேகவைக்கவும் *பிறகு, ஆறவைத்து வெல்லம் அல்லது சர்க்கரை தூவி சூடாக பரிமாறலாம் *வாழைப்பழம், நெய் சேர்த்து சாப்பிட்டால் சுவையும், ஆரோக்கியமும் அதிகரிக்கும். SHARE.