News April 14, 2024
உதயநிதி ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

ஊட்டிக்கு தேர்தல் பரப்புரைக்காக அமைச்சர் உதயநிதி இன்று ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அப்போது, அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முன்னதாக, நேற்று ராமநாதபுரத்தில் பிரசாரத்திற்காக அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 7, 2025
இந்த 8 விஷயங்கள் இருந்தா நீங்களும் ஜெயிக்கலாம்

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது நமது முயற்சியாலும், கிடைக்கும் வாய்ப்புகளாலும் அமையும் என்பார்கள். கிடைக்கும் வாய்ப்பை வெற்றியாக மாற்ற இந்த 8 விஷயங்களை தினமும் கடைப்பிடியுங்க. ➤இலக்கில் தெளிவு / கவனம் ➤சுயவிமர்சனம் ➤பொறுமை ➤திட்டமிடுதல் ➤இடைவிடாத கற்றல் ➤பேச்சுத்திறன் ➤உடற்பயிற்சி ➤சரியான ஓய்வு. இதில் எவற்றை தொடர்ச்சியாக செய்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க
News November 7, 2025
பிஹாரில் NDA -க்கு சாதகமான நிலை: விஷால் சூசகம்

பிஹார் தேர்தல் முடிவுகளை ஆவலோடு எதிர்பார்ப்பதாக விஷால் தெரிவித்துள்ளார். தேர்தல் களம் வலுவாக தெரிவதாகவும், அது பிஹாரின் எதிர்கால நலனுக்கு மிக முக்கியம் என்றும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார். 60% மேல் வாக்குகள் பதிவாகியிருப்பது NDA-வுக்கு சாதகமான மனநிலையை காட்டுவதாக விஷால் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறந்த வேட்பாளர் வெற்றி பெறட்டும் என்று கூறியுள்ளார்.
News November 7, 2025
வணிக அரசியல் நடத்தும் திமுக: அன்புமணி

அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு ₹20 லட்சம் வரை வைப்புத்தொகை செலுத்தும் வகையில் விதிகள் வகுப்பது ஏற்புடையதல்ல என்று அன்புமணி தெரிவித்துள்ளார். திமுக வணிக அரசியல் செய்வதாகவும், அதை போன்ற கட்சிகள் மட்டுமே பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி யோசனை கூறுவதாக அவர் சாடியுள்ளார். சேதத்திற்கு அபராதம் வசூலிக்க சட்டத்தில் இடம் உள்ளதால், வைப்புத்தொகை முன்மொழிவை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.


