News October 2, 2025
இறந்த மனைவி உயிருடன் வந்த ஆச்சரியம்

உ.பி.,யில் வரதட்சனை கொடுமையால் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட பெண்ணை, 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 2023-ல் அப்பெண் மாயமாகியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால், வரதட்சணை கேட்டு கணவர் கொன்றுவிட்டதாக, பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். இதில் கணவர் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், ம.பி.,யில் அப்பெண்ணை போலீசார் கண்டுபிடித்து, தலைமறைவானதற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 3, 2025
ஏர் இந்தியா விமான விபத்து: இன்று முக்கிய ஆலோசனை

கடந்த ஜூனில் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒருவரை தவிர 241 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான உயர்மட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் இன்றைய ஆலோசனை கூட்டத்தில், இந்திய விமானிகள் சங்கத்தினர் கலந்துகொள்ளவுள்ளனர். இதில், விமான விபத்து முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 3, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 477 ▶குறள்: ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி. ▶பொருள்: வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகு.
News October 3, 2025
BBL லீக்கில் அஸ்வினை வாங்கிய சிட்னி தண்டர்

ILT20 ஏலத்தில் முன்னாள் CSK வீரர் அஸ்வினை வாங்க யாரும் ஆர்வம் காட்டாதது அவருக்கான பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிக் பாஷ் லீக் (BBL) தொடரில் சிட்னி தண்டர் அணி அஸ்வினை தட்டி தூக்கியுள்ளது. இந்த சீசன் முழுவதும் இந்த அணிக்காக அவர் விளையாடவுள்ளார். கடந்த ஆகஸ்டில் IPL-ல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அஸ்வின், பிற நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் கலந்துகொள்வேன் என்று கூறியிருந்தார்.