News October 2, 2025
பறக்கும் நரி தெரியுமா? பாருங்க

ராஜஸ்தான்-குஜராத் எல்லைப் பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகள், கிட்டத்தட்ட 5 அடி இறக்கைகள் கொண்ட பெரிய வௌவால்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த பெரிய வௌவால்களுக்கு நரி போன்ற முகம் இருப்பதால் இதனை ‘பறக்கும் நரி’ என்றும் அழைக்கின்றனர். பெரும்பாலும் பழங்களை உண்ணும் இந்த வௌவால்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலே, போட்டோக்கள் உள்ளன. நீங்க இதுபோன்று பார்த்ததுண்டா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News October 3, 2025
இதயம் காக்கும் தாம்பத்ய உறவு

தாம்பத்ய உறவு என்பது இன்பத்தை அளிப்பது மட்டுமல்ல, உங்கள் இதயத்தையும் பாதுகாக்கும் என்கின்றனர் டாக்டர்கள். உடலுறவின் போது உடல் ஃபீல்-குட் ஹார்மோன்களை ரிலீஸ் செய்கிறது. இது ரத்த நாளங்களை தளர்த்தி ரத்தவோட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம், ஸ்ட்ரோக், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இயற்கையாகவே கட்டுப்படுத்தப் படுகிறது. இதை நோட் பண்ணிகோங்க தம்பதிகளே.
News October 3, 2025
இம்மாதம் முதல் சீனாவிற்கு நேரடி விமான சேவை

இந்தியா – சீனா இடையிலான நேரடி விமான சேவை வரும் 26-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா, சீனா உடனான எல்லை பிரச்னை காரணமாக, கடந்த 4 ஆண்டுகளாக இருநாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.
News October 3, 2025
விஜய்யின் தளபதிகளுக்கு ஜாமின் கிடைக்குமா?

கரூர் துயர வழக்கில் தவெக முக்கியத் தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், CTR நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை தவிர்க்க அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுக்கள் நாளை மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளன. அதனுடன் தவெகவை தடை செய்யக் கோருவது உள்ளிட்ட மனுக்களையும் நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர். புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர்.