News October 2, 2025

பாகிஸ்தானின் வரலாற்றையே மாற்றுவோம்: ராஜ்நாத் சிங்

image

இந்திய – பாக்., எல்லை பகுதியான Sir Creek sector-ல் பாகிஸ்தான் அடாவடித்தனம் செய்தால், இந்தியா தீர்க்கமான பதிலடி கொடுக்கும் என ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். குஜராத் ராணுவ முகாமில் பேசிய அவர், இந்தியாவின் பதிலடி என்பது பாகிஸ்தானின் நிலப்பரப்பு, வரலாற்றை அடியோடு மாற்றும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 1965-ல் இந்திய படைகள் லாகூர் வரை சென்றதை பாக்., மறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News October 3, 2025

இதயம் காக்கும் தாம்பத்ய உறவு

image

தாம்பத்ய உறவு என்பது இன்பத்தை அளிப்பது மட்டுமல்ல, உங்கள் இதயத்தையும் பாதுகாக்கும் என்கின்றனர் டாக்டர்கள். உடலுறவின் போது உடல் ஃபீல்-குட் ஹார்மோன்களை ரிலீஸ் செய்கிறது. இது ரத்த நாளங்களை தளர்த்தி ரத்தவோட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம், ஸ்ட்ரோக், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இயற்கையாகவே கட்டுப்படுத்தப் படுகிறது. இதை நோட் பண்ணிகோங்க தம்பதிகளே.

News October 3, 2025

இம்மாதம் முதல் சீனாவிற்கு நேரடி விமான சேவை

image

இந்தியா – சீனா இடையிலான நேரடி விமான சேவை வரும் 26-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா, சீனா உடனான எல்லை பிரச்னை காரணமாக, கடந்த 4 ஆண்டுகளாக இருநாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.

News October 3, 2025

விஜய்யின் தளபதிகளுக்கு ஜாமின் கிடைக்குமா?

image

கரூர் துயர வழக்கில் தவெக முக்கியத் தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், CTR நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை தவிர்க்க அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுக்கள் நாளை மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளன. அதனுடன் தவெகவை தடை செய்யக் கோருவது உள்ளிட்ட மனுக்களையும் நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர். புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர்.

error: Content is protected !!