News October 2, 2025

சேலம்: பேருந்தில் ஒழுங்கற்ற நடத்தையா? கவலை வேண்டாம்!

image

சேலம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம், சேலம் கோட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில், தினமும் பல ஆயிரம் பேர், பயணம் செய்கின்றனர். பயணம் செய்யும்போது, சேவை குறைபாடு ஏற்பட்டாலோ, ஓட்டுனர், நடத்துனர் ஆகியோர், பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டாலோ, இதுகுறித்து, 1800 599 1500, 94892 – 03900 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். SHARE பண்ணுங்க மக்களே!

Similar News

News November 10, 2025

கொளத்தூர்: பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!

image

சேலம், கொளத்தூர் அருகே சவேரியார் பாளையத்தைச் சேர்ந்த வித்யஸ்ரீ (16) என்ற மாணவி, தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பாட்டியின் கண்டிப்பால் மனமுடைந்தவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News November 9, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, சேலம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இன்று (நவ. 09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News November 9, 2025

வாழப்பாடி: 17 வயது சிறுமி காணாமல் போனதால் பரபரப்பு!

image

வாழப்பாடி: கொட்டவாடியை சேர்ந்த 17 வயது சிறுமி காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்தும் உறிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் நேற்று கொட்டவாடியில் அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏத்தாப்பூர் போலீசார் பேச்சு நடத்தி, சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உறுதி அளித்தனர். பின் அனைவரும் கலைந்து சென்றனர்

error: Content is protected !!