News October 2, 2025

திருப்பதி சக்ர ஸ்நானம் PHOTOS

image

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று, சக்ர ஸ்நானம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீவாரி புஷ்கரணியில் புனித நீராடினர். காலை 6 மணி முதல் 9 மணிக்குள் ஸ்ரீ பூவராக சுவாமி கோயில் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வாருடன் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீ மலையப்ப சுவாமிகளுக்கு திருமஞ்சனம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Similar News

News October 2, 2025

விசிகவிற்கும் ஒருநாள் இப்படிப்பட்ட நிலை வரும்: EPS

image

ஆட்சியாளர்களுக்கு தூபம் போடுவதை திருமாவளவன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என EPS அறிவுறுத்தியுள்ளார். விசிக மதுஒழிப்பு மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க எப்படியெல்லாம் அலைக்கழித்தார்கள் என்பதை திருமாவளவன் மறக்க வேண்டாம் எனவும், விசிகவிற்கும் ஒருநாள் இப்படிப்பட்ட நிலை வரும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், திமுகவினர் அளிக்கும் போலி வாக்குறுதிகள் ஒருபோதும் எடுபடாது என்றும் தெரிவித்துள்ளார்.

News October 2, 2025

38-ம் ஆண்டில் பாம்பன் பாலம் PHOTOS

image

1988 வரை ராமேஸ்வரத்தை இந்தியாவுடன் இணைக்க பாம்பன் ரயில் பாலம் மட்டுமே இருந்தது. 1974-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1988 அக்டோபர் 2-ம் தேதி ‘அன்னை இந்திரா காந்தி பாலம்’ என பெயரிடப்பட்டு, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால், பாம்பன் சாலைப் பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. தற்போது இந்த பாலம் 38-ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதன் சிறப்பை SHARE பண்ணுங்க.

News October 2, 2025

இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வராதீங்க!

image

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்த நிலையில், தமிழகத்தில் 3 நாள்களுக்கு <<17894555>>மஞ்சள் அலர்ட்<<>> எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் நண்பர்களே!

error: Content is protected !!