News October 2, 2025

சற்றுமுன்: கனமழை வெளுத்து வாங்கும்

image

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததால், அடுத்த 3 நாள்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், நாளை சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தி.மலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், அக்.5-ம் தேதி சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

Similar News

News October 2, 2025

சூர்யா உடன் மோதும் ‘மதகஜராஜா’ காம்போ

image

சூர்யாவின் ‘கருப்பு’ படம் 2026 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேநாளில், விஷால் நடிப்பில் சுந்தர் C இயக்கும் படத்தையும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம். தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ பட வேலைகளில் பிஸியாக இருக்கும் சுந்தர் C, விஷால் படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம். வரும் நவம்பரில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாம்.

News October 2, 2025

ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்திய இளம் படை

image

ஆஸி., U19 அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய U19 அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸி., 243/10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியாவோ 428/10 ரன்களை எடுத்தது. 2-வது இன்னிங்ஸில் ஆஸி., 127/10 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 140, வைபவ் சூர்யவன்ஷி 113 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டனர்.

News October 2, 2025

‘கரூர் துயரத்திற்கு CM ஸ்டாலின் தான் காரணம்’

image

கரூர் துயர சம்பவத்திற்கு CM ஸ்டாலின் தான் காரணம் என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தான் 163 தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டுள்ளதாகவும், அதில் 5 மாவட்டங்களில்தான் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை ஆணையம் அமைத்த பிறகு அதிகாரிகள் விளக்கம் அளித்தது ஏன் என கேள்வி எழுப்பிய EPS, இனியாவது பொதுக்கூட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

error: Content is protected !!