News October 2, 2025
திருமா திமுகவில் சேர்ந்து விடலாம்: வினோத் பி.செல்வம்

திருமாவளவன் கட்சியை கலைத்துவிட்டு, திமுகவில் சேர்ந்து விடலாம் என பாஜக மாநிலச் செயலர் வினோத் பி.செல்வம் விமர்சித்துள்ளார். கரூர் துயரத்தில் உயிரிழந்த 15 பேர் பட்டியலின மக்களுக்கு சேர்த்துதான் பாஜக போராடுகிறது எனக் கூறிய அவர், கரூர் சம்பவத்தில் திமுகவுக்கு திருமா முட்டு கொடுப்பதாக விமர்சித்தார். மேலும், கரூர் துயரத்தில் உண்மையை கண்டறியும் பாஜகவின் முயற்சி ஒருபோதும் நிற்காது எனவும் தெரிவித்தார்.
Similar News
News October 2, 2025
‘கரூர் துயரத்திற்கு CM ஸ்டாலின் தான் காரணம்’

கரூர் துயர சம்பவத்திற்கு CM ஸ்டாலின் தான் காரணம் என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தான் 163 தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டுள்ளதாகவும், அதில் 5 மாவட்டங்களில்தான் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை ஆணையம் அமைத்த பிறகு அதிகாரிகள் விளக்கம் அளித்தது ஏன் என கேள்வி எழுப்பிய EPS, இனியாவது பொதுக்கூட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
News October 2, 2025
பறக்கும் நரி தெரியுமா? பாருங்க

ராஜஸ்தான்-குஜராத் எல்லைப் பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகள், கிட்டத்தட்ட 5 அடி இறக்கைகள் கொண்ட பெரிய வௌவால்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த பெரிய வௌவால்களுக்கு நரி போன்ற முகம் இருப்பதால் இதனை ‘பறக்கும் நரி’ என்றும் அழைக்கின்றனர். பெரும்பாலும் பழங்களை உண்ணும் இந்த வௌவால்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலே, போட்டோக்கள் உள்ளன. நீங்க இதுபோன்று பார்த்ததுண்டா? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 2, 2025
பாகிஸ்தானின் வரலாற்றையே மாற்றுவோம்: ராஜ்நாத் சிங்

இந்திய – பாக்., எல்லை பகுதியான Sir Creek sector-ல் பாகிஸ்தான் அடாவடித்தனம் செய்தால், இந்தியா தீர்க்கமான பதிலடி கொடுக்கும் என ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். குஜராத் ராணுவ முகாமில் பேசிய அவர், இந்தியாவின் பதிலடி என்பது பாகிஸ்தானின் நிலப்பரப்பு, வரலாற்றை அடியோடு மாற்றும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 1965-ல் இந்திய படைகள் லாகூர் வரை சென்றதை பாக்., மறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.