News October 2, 2025

BREAKING: சற்றுநேரத்தில் கட்சி அலுவலகத்தில் விஜய்

image

சென்னை பனையூர் இல்லத்தில் இருந்து 4-வது நாளாக தவெக தலைவர் காரில் வெளியே சென்றுள்ளார். சற்றுநேரத்தில் கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்லும் அவர், காந்தி, காமராஜர் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு செல்லும் அவர், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார்.

Similar News

News October 2, 2025

பாகிஸ்தானின் வரலாற்றையே மாற்றுவோம்: ராஜ்நாத் சிங்

image

இந்திய – பாக்., எல்லை பகுதியான Sir Creek sector-ல் பாகிஸ்தான் அடாவடித்தனம் செய்தால், இந்தியா தீர்க்கமான பதிலடி கொடுக்கும் என ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். குஜராத் ராணுவ முகாமில் பேசிய அவர், இந்தியாவின் பதிலடி என்பது பாகிஸ்தானின் நிலப்பரப்பு, வரலாற்றை அடியோடு மாற்றும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 1965-ல் இந்திய படைகள் லாகூர் வரை சென்றதை பாக்., மறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News October 2, 2025

கொசுக்களால் ரத்தம் குடிக்காமல் வாழமுடியுமா?

image

கொசுக்கள் உயிர்வாழ ரத்தம் தேவையில்லை என சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், கொசுக்கள் பூக்களின் தேனை உண்டு வாழ்கின்றன. இதில், முட்டையிடும் பெண் கொசுக்களுக்கு புரதம், இரும்பு சத்து தேவைப்படுவதால் அவை ரத்தத்தை குடிக்கின்றன. ஆனால், பெண் கொசுக்கள் ரத்தம் குடிக்கவில்லை என்றாலும் 2 வாரங்களில் இருந்து 1 மாதம் வரை உயிரோடு இருக்கும். இந்த தகவல் பிடித்திருந்தால் லைக் பண்ணலாமே.

News October 2, 2025

அரசு வேலைக்காக குழந்தையை புதைத்த கொடூர பெற்றோர்

image

ம.பி.,யில் உள்ள காட்டில் சமீபத்தில், பச்சிளம் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், தனது அரசு வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் கணவனும், மனைவியும் தங்களது 4-வது குழந்தையை உயிருடன் புதைத்தது தெரியவந்துள்ளது. ம.பி.,யில் அரசு பணியாளர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால், பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதால், 3-வது குழந்தையையும் அத்தம்பதி அரசு ஆவணங்களில் இருந்து மறைத்துள்ளனர்.

error: Content is protected !!