News April 14, 2024

மக்கள் பிரச்னைகளை பாஜக விவாதிக்காது

image

நாட்டின் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்னைகளை விவாதிக்கக்கூட பாஜக தயாராக இல்லை எனக் குற்றம்சாட்டிய அவர், பிரதமர் மோடியின் மாய வலையில் இளைஞர்கள் சிக்க மாட்டார்கள் என்றார். மேலும், காங்கிரஸின் கரங்களை வலுப்படுத்த இளைஞர்கள் தயாராகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 18, 2025

நெகிழ்ச்சியில் CPR-ன் தாய் பகிர்ந்த விஷயம்..

image

துணை ஜனாதிபதி தேர்தலுக்காக NDA கூட்டணியின் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதற்கு, அவரது தாயார் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். முதல் துணை ஜனாதிபதியாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பெயரைத்தான் தனது மகனுக்கு வைத்ததாகவும், இன்று அதே பதவியில் தனது மகன் அமரவிருக்கிறார் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்த அவர் இதற்காக பாஜகவிற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

News August 18, 2025

பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

image

✪துணை <<17440516>>ஜனாதிபதி <<>>தேர்தல்.. திமுகவுக்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்
✪மனசாட்சி உள்ள <<17440212>>மக்களாட்சியை <<>>நோக்கி.. தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
✪ஏற்றத்தில் <<17439680>>பங்குச்சந்தை<<>>.. 1,084 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்
✪<<17439383>>உக்ரைன் <<>>NATO-வில் சேரக்கூடாது.. டிரம்ப்
✪₹400 கோடி <<17439244>>வசூலை<<>> அள்ளிய ‘கூலி’

News August 18, 2025

பிழையை திருத்திக் கொள்ள திமுகவுக்கு வாய்ப்பு: நயினார்

image

2002-ல் ஜனாதிபதி வேட்பாளராக அப்துல் கலாம் களமிறங்கியபோது, திமுக எதிராக வாக்களித்தது. இந்நிலையில், மாபெரும் சாதனை தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலையில் இருந்த திமுக, அன்று ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்தது. அதை திருத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு தற்பொழுது அமைந்துள்ளது. துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழரை (CPR) DMK ஆதரிக்க வேண்டும் என நயினார் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!