News October 2, 2025
Recipe: கேரளா பருப்பு பாயாசம் செய்யலாம் வாங்க!

வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை கிளறி, தனியே எடுத்து வைக்கவும். மற்றொரு வாணலியில் கடலைப்பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு கடலைப்பருப்பு மூழ்குமளவுக்கு தேங்காய் பால் ஊற்றி நன்கு வேகவிடவும். வெந்ததும் அதனுடன் வெல்லப்பாகு, சுக்கு பொடி சேர்த்து கிளறவும். இத்துடன் வறுத்து வைத்த கலவையை சேர்த்து, இறக்கினால் கேரளா பருப்பு பாயாசம் ரெடி.SHARE.
Similar News
News October 2, 2025
RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை தொடக்கம்

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (RTE) 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. வரும் 6-ம் தேதி RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், வரும் 15-ம் தேதிக்குள் EMIS போர்ட்டல் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் தகுதியான மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது.
News October 2, 2025
விஜய் இதயத்தில் வலி இல்லை: சீமான்

விஜய் வெளியிட்ட வீடியோவில் தனக்கு உடன்பாடில்லை என சீமான் தெரிவித்துள்ளார். விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை, இருந்திருந்தால் வீடியோவில் வெளிப்பட்டிருக்கும் எனவும், கரூரில் மட்டும் எப்படி இப்படி நடந்தது என அவர் கேட்டது தவறு என்றும் சீமான் விமர்சித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு என்பது வாய்க்கரிசி எனவும், திரைப்பட வசனம் போல் விஜய் பேசியதாகவும் சாடியுள்ளார்.
News October 2, 2025
திருப்பதி சக்ர ஸ்நானம் PHOTOS

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று, சக்ர ஸ்நானம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீவாரி புஷ்கரணியில் புனித நீராடினர். காலை 6 மணி முதல் 9 மணிக்குள் ஸ்ரீ பூவராக சுவாமி கோயில் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வாருடன் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீ மலையப்ப சுவாமிகளுக்கு திருமஞ்சனம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.