News October 2, 2025
தமிழகம் முழுவதும் இன்று மூடல்..

டாஸ்மாக் கடைகள் வழக்கமாக நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும். ஆனால், இன்று காந்தி ஜெயந்தி என்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை பாயும். பார் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 2, 2025
RSS நினைவு நாணயத்தை PM வெளியிடும் அவல நிலை:CM

CM ஸ்டாலின் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது <<17892666>>உருவ படத்திற்கு மரியாதை<<>> செலுத்தினார். பின்னர் அவர் பகிர்ந்துள்ள பதிவில், பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை காந்தி வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், RSS இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, PM அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News October 2, 2025
₹2,000 நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

₹2,000 நோட்டுகளின் புழக்கம் 2023 மே 19-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. ஆனால், தற்போதுவரை ₹5,884 கோடி மதிப்பிலான 2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வரவில்லை என RBI தெரிவித்துள்ளது. உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால் RBI சென்னை அலுவலகத்தில் கொடுத்து மாற்றலாம். அடையாள அட்டை உள்ளிட்டவற்றுடன் சென்று பணத்தை டெபாசிட் செய்யலாம். தபால் நிலையம் மூலமும் RBI-க்கு ₹2000 நோட்டுகளை அனுப்பலாம். SHARE IT.
News October 2, 2025
பழங்கள் சாப்பிட்டதால் உயிரிழந்த பெண்

பழங்களை மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்த போலந்து நாட்டு பெண் உயிரிழந்துள்ளார். 27 வயதான கரோலினா க்ர்சிசாக், தனது 19 வயதில் இருந்து Fruitarian டயட் கடைபிடித்து வந்த நிலையில், உடல் எடை 22 கிலோவாக குறைந்து, எலும்புகள் தேய்மானம் ஆகி ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆளாகியுள்ளார். எனவே, ஊட்டச்சத்து நிபுணர்கள், டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் டயட் கடைபிடிக்க வேண்டாம். டயட் இருக்கும் நண்பர்களுக்கு இதை பகிரவும்!