News October 2, 2025
POK துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற <<17886965>>போராட்டத்தின்போது<<>> நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் 3 போலீசாரும் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அசாதாரணமான சூழல் நிலவி வருவதால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 2, 2025
Cinema Roundup: விஜய் சேதுபதி படத்திற்கு ‘SLUMDOG’ தலைப்பு

*ஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் ‘தி கேம்: யு நெவர் பிளே அலோன் தொடர்’ நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. மம்மூட்டி நடிக்கும் ‘பேட்ரியாட்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. *விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு ‘SLUMDOG’ என தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாக தகவல். *முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. *பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் இதுவரை ₹245.50 கோடி வசூலித்துள்ளது.
News October 2, 2025
நாளை அரசு விடுமுறையா? இல்லையா?

ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி, நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. பண்டிகைக்காக, சொந்த ஊர் சென்றவர்கள் மகிழ்ச்சியாக விடுமுறையை கொண்டாடும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் சொந்த ஊர்களுக்கு பலரும் சென்றுள்ளதால், நாளை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் உள்பட பலதரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசும் அறிவிக்குமா?
News October 2, 2025
ஆனந்த் மீது மட்டும் எப்படி வழக்கு? திருமா

விஜய், ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு போட முகாந்திரம் இல்லை எனில், ஆனந்த் மீதான வழக்கில் எப்படி முகாந்திரம் இருக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் மீது வழக்குப் பதியாவிட்டால், N.ஆனந்த் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனக் கூறிய அவர், கரூர் துயரத்திற்கு விஜய் கவலைப்பட்டதாக தெரியவில்லை என சாடினார்.