News October 2, 2025

சுயமாக சிந்தித்தால் மட்டுமே விஜய்க்கு எதிர்காலம்: திருமா

image

கரூர் துயருக்கு திமுக மீது பழி சுமத்துவது என்பது ஆபத்தான அரசியல் என திருமாவளவன் கூறியுள்ளார். விஜய் எப்போது சுயமாக சிந்தித்து செயல்திட்டங்களை வரையறுக்கிறாரோ, அப்போது தான் அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும் என்றும் விமர்சித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அரசு மீதே தவறு உள்ளதாக அண்ணாமலை உடனடியாக கூறியது, அவர்களுக்கே எதிராகவே முடியும் என்றும் எச்சரித்துள்ளார்.

Similar News

News October 2, 2025

விஜய்யை வைத்து பாஜக போடும் பிளான் இதுவே: திருமா

image

விஜய் ஆபத்தான அரசியலை கையில் எடுத்திருப்பதாக திருமா சாடியுள்ளார். கொள்கை எதிரியாக அறிவித்தும், விஜய்யை பாதுகாக்க பாஜக வருவது சந்தேகத்தை எழுப்புவதாக கூறிய அவர், பாஜகவின் தூண்டுதலால் தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் எனவும் பேசியுள்ளார். மேலும், விஜய்யை பாஜக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் எனவும், தனியாக நிற்கவைத்து வாக்குகளை பிரிப்பதே அவர்களது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 2, 2025

கரூர் துயரம்.. உதவிகளை அறிவித்தார் விஜய் தொண்டர்

image

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக சார்பில் உதவி செய்யப்படும் என்று அக்கட்சியின் மரிய வில்சன் அறிவித்துள்ளார். கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஈடாக நாம் எதையும் செய்துவிட முடியாது. ஆனால், அவர்களின் கனவுகளை நிறைவேற்ற துணை நிற்க முடியும். அந்த வகையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான பள்ளி, கல்லூரி செலவுகளை ஏற்பதாகவும், வேலை வாய்ப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

News October 2, 2025

அப்பவே அப்படி செய்தவர்தான் அன்புமணி: ராமதாஸ்

image

தமிழ்குமரனுக்கு வழங்கிய இளைஞர் சங்க தலைவர் பதவியை 2022-லேயே அன்புமணி ஏற்க மறுத்ததாக ராமதாஸ் கூறியுள்ளார். பதவியில் இருந்து விலகக்கோரி தமிழ்குமரனுக்கு அன்புமணி அழுத்தம் கொடுத்ததாக கூறிய அவர், அதனால் அப்போதே தந்தை-மகனுக்கு இடையே பிரச்னை தொடங்கியது எனவும் விளக்கமளித்துள்ளார். மேலும், இதையடுத்துதான் பேரன் முகுந்தனுக்கு பதவி கொடுத்தபோது தன் மீது மைக் பாய்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!