News October 2, 2025

தேனி: நெஞ்சுவலி காரணமாக இளைஞர் உயிரிழப்பு

image

தேனி நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமலை (33) பெயிண்டர் வேலை பார்த்து வரும் இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற இவர் உடல்நிலை சரி இல்லை என வீடு திரும்பி உள்ளார். அன்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு (செப்.30) பதிவு.

Similar News

News November 15, 2025

66.90 அடியாக குறைந்த வைகை அணையின் நீர்மட்டம்

image

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து முதல் போக மற்றும் ஒருபோக பாசனம், மதுரை மாவட்ட தேவை மற்றும் குடிநீருக்காக என அணையில் இருந்து வினாடிக்கு 2299 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் நீர் வரத்து 1402 கனஅடியாக உள்ளது. நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து இன்று (நவ.15) 66.90 அடியாக குறைந்து காணப்படுகிறது.

News November 15, 2025

தேனி: மத்திய அரசு பள்ளியில் வேலை ரெடி.. APPLY NOW

image

தேனி மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக் <<>>செய்யுங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News November 15, 2025

தேனி: ஆசிரியருக்கு கத்திக்குத்து.. ஒருவர் கைது

image

காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த முத்துராஜா (40) சுருளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவருக்கும் அதே பகுதி ராமகிருஷ்ணன் என்பவருக்கும் தோட்டம் பாதை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று (நவ. 14) முத்துராஜா பள்ளி அருகே உள்ள டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த ராமகிருஷ்ணன் கத்தியால் முத்துராஜாவை முதுகில் குத்தி உள்ளார். போலீசார் ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

error: Content is protected !!