News October 2, 2025

ஒரே நாளில் 100 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு

image

இந்தியாவில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளதாக NCRB அறிக்கையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக 2023-ல் ஒரு நாளில் 175 திடீர் மரணங்கள் ஏற்பட்டதாகவும், அதில் 100 உயிரிழப்புகள் மாரடைப்பால் நிகழ்ந்தவை என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 2023-ல் 35,637 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில், TN-ல் 1,711 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர். எனவே இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க..

Similar News

News October 2, 2025

சோனம் வாங்சுக்கை விடுவிக்க கோரி முர்முவுக்கு கடிதம்

image

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதற்கு காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் அமைப்பே காரணம் எனக் கூறி, அவர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜோத்பூர் சிறையில் உள்ளார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஜனாதிபதி முர்மு தலையிட்டு, வாங்சுக்கை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று, அவரது மனைவி கீதாஞ்சலி அங்மோ கடிதம் அனுப்பியுள்ளார்.

News October 2, 2025

மகளிர் உலகக் கோப்பை: கைகுலுக்கல் கிடையாது

image

மகளிர் ODI உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அக்.5-ல் இந்தியா – பாக்., அணிகள் மோதவுள்ளன. கொழும்புவில் நடக்கவுள்ள இந்த போட்டியின்போது, பாக்., வீராங்கனைகளுடன் இந்திய வீராங்கனைகள் கைகுலுக்க கூடாது என BCCI அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஆசிய கோப்பை தொடரில் ஃபைனல் வரையிலான போட்டிகளில் இரு அணி வீரர்களும் கைகுலுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News October 2, 2025

தவெக ரசிகர் மன்றமாகவே உள்ளது: கார்த்தி சிதம்பரம்

image

தவெக ஒரு கட்டளை மற்றும் கட்டுப்பாடுகள் கொண்ட கட்சி அல்ல, அது ஒரு ரசிகர் மன்றமாகவே இன்னும் செயல்படுகிறது என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். அதே இடத்தில்தான் அதிமுக பரப்புரையும் நடந்தது என தெரிவித்த அவர், அக்கட்சியில் கட்டுப்பாடுகள் உள்ளதால் தொண்டர்கள் சரியாக இருந்தனர் என்றார். மாநில, மாவட்ட நிர்வாகிகளின் சொல்லுக்கு தொண்டர்கள் கட்டுப்பட வேண்டும், ஆனால் அது தவெகவில் இல்லை எனவும் கூறினார்.

error: Content is protected !!