News October 1, 2025
நாளை மிக கவனம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, சென்னை, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே, நாளை தமிழகத்தில் கனமழைக்கான <<17884649>>மஞ்சள் அலர்ட்<<>> கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், காலையில் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் கவனமாய் இருங்கள் நண்பர்களே!
Similar News
News October 2, 2025
இனி கத்தாரை தாக்கினால் USA களமிறங்கும்

கத்தாரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கத்தார் மீதான தாக்குதல் அமெரிக்க இறையாண்மை மீதான தாக்குதல் எனவும், அப்படி ஒரு சம்பவம் இனி நடந்தால் அமெரிக்க ராணுவம் களத்தில் இறங்கும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சில நாள்களில், அமெரிக்கா இத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
News October 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 476 ▶குறள்: நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும். ▶பொருள்: ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.
News October 2, 2025
இந்தியா வேண்டாம்: கடிதம் எழுதிய பாக்.,

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா – பாக்., மோதும் விளையாட்டு போட்டிகள் இருநாடுகளை தவிர பிற நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெறவுள்ள ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற பாக்., வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பிற்கும் பாக்., கடிதம் எழுதியுள்ளது. இரு அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் துபாயில் நடைபெற்றது.