News October 1, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 01.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
Similar News
News October 2, 2025
திருப்பூர்: பண்ணை தொடங்க 50% மானியம் பெறுவது எப்படி?

1)நாட்டுக் கோழிப் பண்ணைக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் 250 கோழிக் குஞ்சுகள், 50%மானியம், கொட்டகை, உபகரணங்கள் அரசால் வழங்கப்படும்.
2)இதற்கு 625 சதுரடி நிலம், அதற்கான சிட்டா வைத்திருத்தல் அவசியம்.
3)இதற்கு 50% மானியம், மீதமுள்ள 50% வங்கிக் கடனாகவும் பெறலாம்.
4)அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 2, 2025
திருப்பூர் அருகே சோக சம்பவம்!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் திருமலைசாமி. இவரது மனைவி காந்திமதி (46). இவர் நேற்று வீட்டின் அருகே உள்ள பிஏபி வாய்க்காலுக்கு சென்றுள்ளார். அப்போது காந்திமதி வாய்க்காலுக்குள் தவறி விழுந்துள்ளார். இதில் காந்திமதி பரிதாபமாக உயிரிழந்தார். காங்கேயம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 2, 2025
திருப்பூர் அருகே இளைஞர் பரிதாபமாக பலி!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார் (22). இவர் படியூர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், செப்.30ஆம் தேதி காலை படியூர் பகுதியில் பைக்கில் சென்ற போது, எதிரே வந்த மற்றொரு கம்பெனி வேன் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.