News October 1, 2025
CM ஸ்டாலினுக்கு நயினார் எழுப்பும் 12 கேள்விகள்

கரூர் துயரம் தொடர்பாக CM ஸ்டாலினுக்கு 12 கேள்விகளை நயினார் நாகேந்திரன் முன்வைத்துள்ளார். கரூர் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தயங்குவது ஏன்? பெரிய அரசியல் பேரணி நடக்கும் வேளையில் SP கரூரில் இல்லாத காரணம் என்ன? விஜய் பரப்புரையின் கூட்டத்தை சரியாக மதிப்பிடாதது எதனால்? உள்பட 12 கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார். மேலும், திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே கரூர் துயரத்திற்கான காரணம் என்று அவர் சாடியுள்ளார்.
Similar News
News October 2, 2025
ராசி பலன்கள் (02.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 2, 2025
தமிழகத்திற்கு ₹4,144 கோடி நிதி விடுவிப்பு

மாநில அரசுகளுக்கான ₹1,01,603 கோடி வரிப்பகிர்வு நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுப்படுத்த தமிழக அரசுக்கு ₹4,144 கோடி விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு ₹18,277 கோடி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக அக்.10-ம் தேதி நிதி விடுவிக்கப்படும் நிலையில், இம்முறை 10 நாள்களுக்கு முன்பே விடுவிக்கப்பட்டுள்ளது.
News October 1, 2025
அரசு ஊழியர்களை திமுக ஏமாற்றுகிறது: அன்புமணி

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிமுக ஆட்சியில் ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டு அறிக்கை பெற்றப்பட்ட நிலையில், திமுக அரசு ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைத்தது அரசு ஊழியர்களை ஏமாற்றும் வேலை என்று X-ல் அவர் சாடியுள்ளார். குழு அமைத்து 8 மாதங்கள் ஆகியும் பணிகள் முடிக்கப்படாதது ஒரு கூட்டு சதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.