News October 1, 2025
ராம்நாடு: கறி கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (அக். 2) இறைச்சி கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இது அகிம்சையை கடை பிடிக்கும் வகையில் கோழி, மீன், ஆடு உள்ளிட்ட அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் விற்பனைக்கு வைத்துள்ள இறைச்சி மற்றும் கருவிகள் பறிமுதல் செயயப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 7, 2026
இராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் சேவை குறைதீர் முகாம்

இராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் தபால் சேவை குறைதீர் முகாம் மார்ச்.19 காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. தபால், ஸ்பீடு போஸ்ட், மணியார்டர் உள்ளிட்ட சேவைகள் தொடர்பான புகார்களையும், சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு குறைகள் தொடர்பான மனுக்களையும் ரசீது எண் மற்றும் தேவையான விவரங்களுடன் அளிக்க வேண்டும். மார்ச்.16-க்குள் குறைகள் வந்து சேர வேண்டும் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 7, 2026
இராமநாதபுரம் மாவட்ட தாசில்தார் எண்கள்

▶️கடலாடி – 04576-266558
▶️கமுதி – 04576-223235
▶️முதுகுளத்தூர் – 04576-222223
▶️பரமக்குடி – 04564-226223
▶️இராஜசிங்கமங்கலம் – 04561-299699
▶️திருவாடானை – 04561-254221
▶️கீழக்கரை – 04567-241255
▶️இராமேஸ்வரம் – 04573-221252
▶️இராமநாதபுரம் – 04567-220352
இவை இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அலுவலக நேரத்தில் மட்டும் தேவைக்கு அழைக்கவும்.
News March 7, 2026
இராம்நாடு: புதிய அதிமுக பெண் மாநில நிர்வாகிக்கு வாழ்த்து

அதிமுக மாநில மகளிரணி இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள லீமா ரோஸ் மார்ட்டினை அதிமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாநில அம்மா பேரவை இணை செயலாளர் சதன் பிரபாகர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில இணைச்செயலாளர் நாகேந்திர சேதுபதி, பரமக்குடி நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


